FS Dr.TVS rightly mentioned that Tax to GDP ratio should go up.
Blogging about Society, individual and collective behaviour/herd mentality, nudges,economics,business,politics,sports and spirituality and on all the other subjects about which I know very little !!
Tax ruminations!
FS Dr.TVS rightly mentioned that Tax to GDP ratio should go up.
SC judgement on GST council and some random thoughts
Mr.N.Venkatraman,Additional Solicitor General,GOI, has clearly brought the key aspects of this landmark judgment delivered by SC. The confusion stemmed from the attention-grabbing headlines made by media, stating GST Council recommendations are non-binding on Centre and States and have only persuasive value at the most.
Corporate Governance -top of the mind questions
1)Corporate governance in State owned Public sector companies needs to be looked into
For e.g TASMAC is the largest Retailer in terms of Sales revenue of more than Rs.35k Cr per annum
of Liquor in TN.This is TN State Marketing Corporation Ltd ,a Pvt Ltd co. which is wholly owned by
Govt of TN but does not have requirement for appointment of any Independent Director as it is a Pvt
Limited Co.
Its AR after Fy 16-17 is not available in its website ,because it is Pvt Ltd?Its Auditors’ Report(FY 16-
17)is full of qualifications and non-compliance.Even its Sale booking is not in order.It makes huge
losses every year and has negative networth.What is its condition as at 31.3.21 is not known through
its website.
There is no effective Audit Committee as there is no Independent Director to question as it is
considered as Pvt Ltd Co.(see Page 5 of AR)
Since it is Pvt Ltd Co.,No KMPs who are responsible for proper reporting even though it is one of the
biggest retailer in the Co.and I am told even bigger than Reliance Retail’s annual turnover.
What kind of Corporate Governance is this?
This may not be an isolated case. Whether MCA has data as to how many more state entities are
Moribund and rotten like this.
2)As per MCA 21 database a)how many cases under various Sections of Cos.Act 2013 have been
identified
b)And how many are of serious nature like criminal offences
c)How many involve other serious Acts like FEMA violations, Narcotics etc.
d) What are forums before which these cases are lying and the age of the cases and the amount
involved/locked up due to these cases.
e)What are the cases or issues under what sections of Cos. Act come up before Cos end up with
IBC litigation in NCLT.
AI/ML & Data analytics will be useful for this.
3) Research Studies on Related Party Transactions(RPT) will have to go beyond official data sources
to identify a) “Circular Transactions within single Business Group and b) Round-tripping
transactions which lead to fake transactions, volume boosting activities and also used for money-
laundering.
4) Feasibility of Forming advance ruling authorities for all important statutes incl Cos. Act (like
existing for Income Tax and GST), so that entrepreneurs may minimize the statutory risks of business
decisions taken based on their interpretation of the law / regulation, in good faith
Some quick actions by GOI recommended
In an interaction with Industry after the Budget on 1st Feb 2022, FS Dr.TVS rightly mentioned that Tax to GDP ratio should go up.
பெரியாழ்வார்- வேங்கடவனின் அருள் திருவுளம்!திருக்குறிப்பே!
சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு
தன்னை வாழ நின்றநம்பீ தாமோதரா சதிரா என்னையும்
என்னுடைமையையும் உன் சக்கரப்பொறியொற்றிக் கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே.”
இது பெரியாழ்வார் திருமொழியில் கடைசிப் பதிகத்தின் முதல் பாசுரம்.
இந்த பாசுரத்தில் பெரியாழ்வார் திருமலையப்பனின் சௌலப்யத்தை
எடுத்துச் சொல்கிறார்- முதலில் அவனை “உலகு தன்னை வாழ நின்ற
நம்பி” தான் படைத்த இவ்வுலகம் வாழ வேங்கடத்தில் நம்மை வாழ்த்தி
நிற்கின்றவன் யார் என்றால் “நம்பி” என்கிறார். ’நம்பி” என்றால் குணபூர்த்தி
உடையவன். அவன் அருளை நம்பியன்றோ இன்றும் கோடிக்கணக்கில்
ஜனங்கள் அங்கே கூடுகிறார்கள்.
மேலும் அவனை “தாமோதரன்” என்று அழைக்கிறார்.
கண்ணிநுண் சிறுத்தாம்பினால்கட்டுண்ண பண்ணிய
பெருமாயன், தான் அவ்வாறு யசோதையின் பிரியத்துக்கு கட்டுண்டதை
பெயர் சூட்டிக் கொண்டிருப்பது- “ இதோ பாருங்கள் , என்
அம்மாவினால்கட்டுண்டு கிடந்ததின் தழும்பு (தாமோதரன்)”
என்பது எளிமையிலும் எளிமை அல்லவா!! ஆம், அவன் அடியவர்களுக்கு
எளியவன்!
அடுத்து “சதிரா” என்கிறார்.இச்சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும்,
இங்கு அடியார் குற்றங்களை கண்ணெடுத்தும் பாராதவன் என்பது
விளக்கம். தன் அடிசேர்ந்தவர் சரணாகதி செய்தவர், ராவணனே ஆனாலும்
குற்றம் பார்க்காமல் சேர்த்துக் கொள்வான்.
அடுத்து “ என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்
கொண்டு” என்கிறார். வைஷ்ணவ பக்தி லக்ஷணம் என்றால் எப்படி இருக்க
வேண்டும் எனக் கூறுகிறார்.
பஞ்ச சம்ஸ்காரம் வைணவர்களுக்கு அவசியம் என்பதை, “என்னை”
என்பதன் மூலம் தன் ஆத்மாவையும், “என் உடைமை” என்று தன்
சரீரத்தையும் உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன் என்கிறார். இவை
உண்மையில் என்னுடையவை அல்ல- அதனால் உன்னுடையவை
என்பதை உணர்ந்து உன் சங்கு சக்கர பொறி ஒற்றி உன்னிடத்தில் தந்தேன்
என்கிறார். நாம் நம் வீட்டு பாத்திரங்களில் நம் பெயரை பொறிப்பது போல!!
அடுத்து சரணாகதி செய்த பின்பு. இனி என் கையில் ஒன்றுமில்லை
என்கிறார்- “நின் அருளே புரிந்து இருந்தேன் இனி என் திருக்குறிப்பே.”
அப்பாடா, இனி பொறுப்பு விட்டது என “பொறுப்பு துறப்பு’ செய்கிறார்!!
இனி யாவும் அவன் திருவுளப்படி நடக்கட்டும்-அவன் தான் எனக்கு “சாரதி”.
அவன் என்னை வழி நடத்தட்டும். இதற்கு மேல் நான் செய்யக் கூடியது
எதுவுமில்லை என்பது,அவனோடு மனம் ஒன்றிய நிலை!
‘கோவிட்’-‘மஹா மாரி’யம்மா!!
வள்ளுவரின் ஈரடி,பரிமேலழரின் உரை!!
மற்றுமொரு வித்யாசமான கோணம்: வாமனனை "திருக்குறளப்பன் " என்று மலைநாட்டு திவ்யதேசத்தில் உள்ளது.இவன் மூவடி கேட்டான் என்று தெரிவிக்கிறார்.அது போல் குறளும் ஈரடிதான். ஆனால் தாவி உலகையே அளக்கிறதாக நண்பரொருவர் நகைச்சுவையாக ஒப்பிட்டார். அதனாலேயே வள்ளுவரும் வாமனனை தன் குறளில் 610ல்" அடியளந்தான்.." என்று காண்பித்தாரோ" ?!!!
திருவாய்மொழியில் "அறவனை, ஆழிப்படை அந்தணனை.." 2848 பாசுரத்தில் வருகிறது.திருவள்ளுவரும் "அறவாழி அந்தணன்"என்கிறார்!!
திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை கூறும் பல இடங்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியையே மேற்கோள் காட்டுகிறார். ஒரு மன்னவனின் மாட்சியையும், வல்லமையையும் விளக்கும் அதிகாரத்துக்கு, “இறைமாட்சி” என்று பெயர் வைத்திருந்தார் வள்ளுவர். இறைவன் என்ற சொல் ஆதியும் அந்தமும் இல்லாமல் மூல பரம் பொருளாக இருக்கும் அந்த பகவானையே குறிக்கும். அப்படி இருக்கும் போது கேவலம், இந்த உலகில் பிறந்து இறக்கும் ஒரு மனிதனான அரசனை குறிக்க அந்த உயர்ந்த சொல்லை பயன்படுத்தலாமா? என்று பரிமேலழகரை பலர் கேட்டனர். அவர் புன்னகைத்த படியே திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தை காட்டி பின் வருமாறு உரை பகன்றார். பரிமேலழகரின் அதிகார முன்னுரை: அஃதாவது, அவன்தன் நற்குண நற்செய்கைகள். உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின், 'இறை` என்றார். "திருவுடை மன்னரைக்காணில் திருமாலைக்கண்டேனே யென்னும்" (திருவாய்மொழி, பதிகம் 34: பாசுரம். 08) என்று பெரியாரும் பணித்தார். “ திருவாய்மொழியின் 34- 8 ஆம் பாசுரத்தில் நம்மாழ்வார், “திருவுடை மன்னரை காணின் திருமாலை கண்டேனே” என்று சொல்லுகிறார். பல விதமான செல்வங்களைப் பெற்று அரசனாக வாழ்பவனை காணும் போது எல்லாம், எல்லா செல்வங்களுக்கும் இருப்பிடமாக இருக்கும் திருமகளை மணந்த மாயவனையே அங்கு அவர் காண்பதாக சொல்லுகிறார். அதனால், நாட்டை காக்கும் அரசனை இவ்வுலகைக் காக்கும் இறைவனோடு ஒப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது” என்று பரிமேலழகர் கேட்டார். 349 ஆவது குறளை, பார்ப்போம். “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.” பரிமேலழகர் உரை பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும். (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். ' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும்அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.). திருவாய்மொழியைக் காண்போமா: “ அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர் செற்றது மன்னுறில் அற்று இறை பற்றே” குறள் 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் [அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்] பரிமேலழகர் உரை: ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். (நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை 'பேரா இயற்கை' என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார். ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய் 78-6)என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வடநூலார் 'சீவன் முத்தன்' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.). திருவாய்மொழி இவ்வாறு கூறுகிறது “ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய் 78-6)”. குறள் 610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு [பொருட்பால், அரசியல், மடியின்மை] பரிமேலழகர் உரை அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும். ('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.). குறள் 1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. [காமத்துப்பால், களவியல், புணர்ச்சிமகிழ்தல்] பரிமேலழகர் உரை 'நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது' என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம். விளக்கம் (ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப் பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிது கொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.) குறள் 617 மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். [பொருட்பால், அரசியல், ஆள்வினையுடைமை] பரிமேலழகர் உரை மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.). பரிமேலழகர் காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில் வைணவபட்டர் பரம்பரையைச் சேர்ந்தவர். காஞ்சி வரதராஜ பெருமாள்(பேரருளாளன்) கோவிலில் உள்ள கல்வெட்டு இவரை பரிமேலழகிய பெருமான் தாதர் எனக் குறிப்பிடுகிறது. பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ - நூலிற் பரித்த உரையெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி" என்று தொண்டை மண்டல சதகம் பரிமேலழகரின் பெருமை கூறுகின்றது. இவர் திருக்குறளுக்கும் ,மாயோனைப் பாடிய பரிபாடலுக்கும் விருத்தி உரை செய்துள்ளார். (திருமுருகாற்றுப்படைக்கு எழுதிய பரிமேலழகர் வேறு ஒருவர் என்பது பொதுவான கருத்து) இவர் தனது உரையில் மேற்கோள் காட்டிய நூல் தொகுப்பு இவரது பன்மொழிப் புலமையை பறைசாற்றுகின்றது.. (அகநானூறு, புறநானூறு,கலித்தொகை,நற்றிணை,கு சங்ககால இலக்கிய நூல்களும், சீவகசிந்தாமணி,சிலப்பதிகாரம், மகாபாரதம் முதலிய நூல்களும்,திருவாய்மொழி,திருக் முத்தொள்ளாயிரம், மற்றும் கணித / கணக்கியல் நூலான ஏரம்பம் ஆகியவை மேற்கோள் காட்டப்பெறுகின்றன).வைணவப்பெரியாரான பரிமேலழகர் ஏன் திருக்குறளக்கும்,பரிபாடலுக்கும் உரை எழுதினார்?
|


-
The two major loved deities of the Hindu pantheon are Hanuman and Ganesha. Let us dwell into the concepts and significance of these two di...
-
தீண்டாமை எனும் வியாதி, திரும்பி வந்தது ‘கோவிட்’டாய்!, ‘ரெட்டை டம்ளரை’ வீட்டுக்குள் அழைத்து வந்தது அதிரடியாய்! , “தள்ளி நில் தொடாதே”, ஆ...
-
TN Govt has huge arrears of Property Tax and also in many cases, Property Tax has not been revised for years together . Local bodies are w...
Passenger vehicles sales trend is encouraging for the Economy
The Federation of Automobile Dealers Associations (FADA) released its vehicle retail data for March 2025 and the full fiscal year 2024-25 ...
