அன்பே தெய்வமென்று சொல்வது உண்டு;
அன்பே விலங்கானால் உடைப்பதும் உண்டு;
இன்பமே விரும்பி ஏங்குவதும் உண்டு;
இன்பத்தை விலக்குவதும் உண்டவன்;
பழத்துடன் பால் வேண்டி அலைவதும் உண்டு;
கூழே போதுமெனக் கேட்டுண்பது உண்டு;
குழந்தை செல்வம் வேண்டிப் பெறுவதுண்டு;
குழந்தை பேறு வேண்டாமென வேண்டுவதுண்டு;
கைநிறைய வேண்டும் காசென்பதுண்டு;
கையளவு பணமே அதிகம் என்பதுண்டு;
வையகமே தனக்கென வரங்கேட்பதுண்டு;
கையளந்த ஆறடி நிலமே கேட்பதுமுண்டு;
எப்பொருள் வேண்டாமென சொல்லி நின்றாலும்,
மெய்ப்பொருள் வேண்டாமென சொல்வதும் உண்டோ?
அன்பே விலங்கானால் உடைப்பதும் உண்டு;
இன்பமே விரும்பி ஏங்குவதும் உண்டு;
இன்பத்தை விலக்குவதும் உண்டவன்;
பழத்துடன் பால் வேண்டி அலைவதும் உண்டு;
கூழே போதுமெனக் கேட்டுண்பது உண்டு;
குழந்தை செல்வம் வேண்டிப் பெறுவதுண்டு;
குழந்தை பேறு வேண்டாமென வேண்டுவதுண்டு;
கைநிறைய வேண்டும் காசென்பதுண்டு;
கையளவு பணமே அதிகம் என்பதுண்டு;
வையகமே தனக்கென வரங்கேட்பதுண்டு;
கையளந்த ஆறடி நிலமே கேட்பதுமுண்டு;
எப்பொருள் வேண்டாமென சொல்லி நின்றாலும்,
மெய்ப்பொருள் வேண்டாமென சொல்வதும் உண்டோ?
No comments:
Post a Comment